கோவை மக்களின் தாகம் தீர்க்க களமிறங்கிய ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம்-யின் "தாகம் தீர்ப்போம்"

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரேடியோ சிட்டி 91.1 பொழுதுபோக்கிற்கான பாடல்களை மட்டும் ஒளிபரப்பாமல் தனது பல்வேறு செயல்பாடுகள் மூலம் நாடி நரம்பு எல்லாம் கோவை சிட்டி என்றடிப்படையில் மக்களுக்கு சேவையினையும் வழங்கி வருகிறது. 



இந்நிலையில், தமிழகம் முழுவதும் நிலவி வரும் வறட்சியால் மக்கள் குடிக்க நீரின்றி தவித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் அவை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றுசேர்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும், வசதிபடைத்தோர், நடுத்தர வர்க்கத்தினர் விலைகொடுத்து லாரி உள்ளிட்டவற்றின் மூலம் தண்ணீரை பெற்று விடுகின்றனர். ஆனால், அடிமட்ட மக்கள், குடிசைப்பகுதி மக்களால் அவ்வாறு விலைகொடுத்து நீரை வாங்கும் நிலை இல்லாமலேயே உள்ளது.

இந்நிலையில் கோவை மக்களின் தாகம் தீர்க்க களமிறங்கியுள்ளது ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம். இதற்காக "தாகம் தீர்ப்போம்" என்னும் திட்டத்தை துவங்கியுள்ள ரேடியோ சிட்டி அடிமட்ட, குடிசைவாசிகள் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிப்பதே இத்திட்டமாகும். 

இதுகுறித்து, ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம் மண்டல திட்ட இயக்குநர் கே.பிரபு கூறுகையில், தற்போது தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வரும் நிலையில் கோவை உள்ளிட்ட பெரிய மாநகரகங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகளவில் நிலவி வருகிறது. இதனை போக்க "தாகம் தீர்ப்போம்" என்னும் திட்டம் துவங்கப்பட்டு அதற்காக 7200 911 911 என்னும் வாட்ஸ்அப் எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு தங்கள் பகுதியில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து தகவல் அளிக்கும் பட்சத்தில் அப்பகுதிக்கு தாகம் தீர்ப்போம் குழுவினர் சென்று உண்மைநிலையினை கண்டறிவர். இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு தாகம் தீர்ப்போம் குழுவினர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். எங்களுடன் சியாம் சுந்தரம் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனத்தினர் இணைந்து மக்களுக்கு தேவையான தண்ணீரினை வழங்கி வருகின்றனர்.

இத்திட்டத்தினை தற்போது 91 பகுதியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, நேற்று (மே 11) கே.கே.புதூர் பகுதியில் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்தை வரும் காலங்களில் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் செயல்படுத்த உள்ளோம்" என தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...